தஞ்சை ; மண் அள்ளுவதில் விதிகளை மீறிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏவை பட்டுக்கோட்டை டிஎஸ்பி விளாசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மண் அள்ளுவதில் விதிகளை மீறி எடுத்ததாகவும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் மண் அள்ளியதாக லாரிகளை பட்டுக்கோட்டை போலீசார் சிறைபிடித்தனர். இதை அறிந்த திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜியை தொடர்பு கொண்டு, தாசில்தாரிடம் பேசி பிரச்சனையை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
எனவே, சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்குமாறும், மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முதலில் சாதுவாக கூறியுள்ளார். ஆனால், டிஎஸ்பி பாலாஜி, விஷயம் மேலிடம் வரை சென்று விட்டதால், வாகனங்களை விட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கொதித்து போன திமுக எம்எல்ஏ அண்ணாதுரை, சட்டம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.. உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள், எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை டிஎஸ்பியிடம் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.