பிரதமர் மோடியை திமுக எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் – கீழ்கதிர்பூர் கிராமத்தில் வட்டார பொதுநிதியில் இருந்து சீரமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, ரேஷன் கடை திறப்பு விழா முடிந்த பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திமுக எம்எல்ஏ எழிலரசனை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேனு சொன்னாரு-ல, அவரே கேட்டீங்களா..? என்று கூறி பிரதமர் மோடியை ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.