உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்கத லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் மீது சட்டரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சாமானியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக பம்பர் வைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பம்பர் வைத்திருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அதற்குண்டான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதமாக ஈடுபடுவர்.
ஆனால், திருச்சியில் வலம் வரும் ஒரு வாகனத்தின் பம்பர் மட்டும் ஏனோ, மாவட்ட காவல் துறையினர் கண்ணுக்கு புலப்படாதது ஆச்சர்யமே. இதற்கு காரணம் அந்த வாகனத்துக்கு சொந்தக்காரர் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் சௌந்தர பாண்டியன்.
எம்எல்ஏ பதவியில் இருக்கும் அவர் தான் நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடித்து பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் 4வது முறை எம்எல்ஏவாக உள்ள சௌந்தரபாண்டியனோ கோர்ட் என்னை என்ன செய்து விட முடியும் என்று கேட்கும் ரீதியாக , பம்பரை மாட்டிக் கொண்டு, அரசு விழா, அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
காரில் அமர்ந்து செல்லும் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு சல்யூட் அடிக்கும் போலீசாரின் கண்ணில் ஏனோ இந்த பம்பர் தெரிய மறுக்கிறது. இதனால் கார் மீது நடவடிக்கை ஏதும் இதுவரை இல்லை.
சாமானியன் என்றால் பாயும் சட்டம், சட்டமன்ற உறுப்பினர் என்றால் தயங்கி நிற்பது ஏன்? என பொதுமக்கள் கேட்கும் கேள்வி போலீசார் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லையோ என்று தான் நினைக்கதோன்றுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.