Categories: தமிழகம்

பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!

பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவி எம்பி.எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்க பல்வேறு கிராமங்களுக்கு சென்று இருந்தார்.

அவ்வகையில் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து திறந்து வைத்து அங்கு வந்திருந்த மகளிர் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவில்லை என முற்றுகையிட்டு கேட்டபோது, அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் எஸ் பி அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கேஎஸ்.பாபு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்ய கூடாது என பாஜகவினர் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டனர். இதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதில் கைது செய்தபோது உடன்பட மறுத்த மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபுவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறையினரால் மேலும் பரபரப்பு உண்டானது.

தகவல் அறிந்து வந்த திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ஒன்று கூடியதால் சற்று நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.