திருச்சி ; நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா கண்துடைப்பு என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைத்து மாவட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியதாவது :- மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மதிப்பீட்டு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். அதன் பிறகு, தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிர்ணயிக்கப்படும் என அதுதான் மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.
எப்போது கணக்கெடுப்பு தொடங்கும் தெரியவில்லை. எப்போது தொடங்கி எப்போது முடியும் என தெரியவில்லை. அது 10, 20, 30 ஆண்டுகள் ஆகலாம். அதற்கான கால நிர்ணயம் குறிப்பிடவில்லை. இந்த தேர்தலில் மசோதா வர வாய்ப்பு இல்லை. எந்த தேர்தலில் வரும் எனவும் தெரியவில்லை. இதுதான் உண்மை இது வெறும் கண்துடைப்பு.
தலைவர்களை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்குள்ளேயே கொச்சையாக பேசியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது என்னென்ன அச்சுறுத்தல்களை காட்ட முடியுமா..? அதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக – பாஜக பிரிவிற்கு நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்கள் சுயமரியாதைக்கு உட்பட்டது. கட்சியில் மகளிர்க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கருத்திற்கு மாற்று கருத்து இல்லை, எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் காவிரியை குறித்து அதிகம் பேசவில்லை என்று கூறப்படுகிறது என்று கேள்விக்கு, “பாராளுமன்றமே மூன்று நாள் தான் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் பேசிவதற்கு எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை,” என தெரிவித்தார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.