வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீரசாமி அவர்கள் கச்சத்தீவை மீட்டுத் தரும்படி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது : இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையயே உள்ள பால்க் நீரிணைப்பகுதியில் அமைந்துள்ள 285 ஏக்கர் பரப்புள்ள கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது.
மனிதர்கள் யாரும் வசிக்காத இந்த சிறிய தீவை, தமிழக மீனவர்கள் தாங்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, இளைப்பாறவும் தங்கள் மீன்பிடி வலைகளைக் காய வைக்கவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஒன்றிய அரசு, 1976 ஆம் ஆண்டு இலங்கையோடு கடல்சார் எல்லைகளை நிர்ணயிக்க செய்து கொண்ட ஒப்பந்தத்தின்போது, இந்த தீவை இலங்கை அரசுக்குக் கொடுத்து விட்டது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இந்த தீவுக்குச் செல்லவும், அதன் வழியாக கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக மினவர்கள் தங்கள் மீன்பிடி தொழில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 02.04.2025 அன்று, தமிழக சட்டப் பேரவையில், தமிழ்நாடு அரசு, இந்த கச்சத்தீவை உடனடியாக மீட்கத்தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்து,
அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி. உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகின்றேன்.
அந்த தீர்மானத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஒரு காலத்தில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் சேர்ந்து பயன்படுத்திய இந்தப் பகுதியில் தற்போது, தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை இராணுவத்தினால், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்வதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகி விட்டதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அய்நூறுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறத்தாழ நாளொன்றுக்கு இரண்டு மீனவர்கள் வீதம் சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் கூட இன்னமும் 97 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் இருப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மீனவர்கள், அடிக்கடி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்கள் வாழ்வாதாரங்களான படகுகளும், மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மீனவர் கூட இலங்கைப்படையினரால் தாக்கப்படவோ, அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள் என்று கூறிய வாக்குறிதிக்கு மாருக இது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதனால்தான், எங்களது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூட தமிழக மீனவர்கள், என்பவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடுகிறது போல தெரிகின்றது என வேதனையுடன் குறிபிட்டுள்ளார்.
மேலும் இந்த பிரச்சனைய ஒன்றிய அரசு பிராந்தியக் கண்ணோட்டத்துடன் பார்க்காமல், இந்திய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே, அதாவது இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனையாக அணுக வேண்டும், நமது இந்திய குடிமக்களாக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களன் வாழ்வுரிமைச் சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான ராஜிய நடவடிக்கைகளை உடனே மேற் கொண்டு இந்திய மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் வண்ணம் நல்ல தீர்வைக் காணவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.