புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துலட்சுமி. இவருடைய கணவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன். இவரும் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சங்கர் சொத்துக்களை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று இரவு அவரது பஞ்சாயத்துக்குட்பட்ட இளங்குடிபட்டி அய்யனார் கோவிலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கொடூரமான முறையில் கழுத்து, இரண்டு கைகள், வயிறு, தலை ஆகியவற்றில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நமனசமுத்திரம் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று விட்டு நின்று விட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே வந்து விசாரணை மேற்கொண்டார்.
சங்கரின் கொலைக்கு சொத்து வாங்கி விற்பதில் ஏற்பட்ட முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.