தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சிக்கான திட்டத்தை துவக்கி வைத்தார்.
குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வரும் அரசு உயர் அதிகாரியான அரூர் வருவாய் கோட்டாட்சியருக்கு அமர இருக்கை வசதி ஏற்படுத்தாமல் இருந்தனர். மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் எல்லாம் திமுகவின் கட்சி உறுப்பினர் முதல், கிளை, ஒன்றிய,மாவட்ட செயலாளர் என அனைத்து தி.மு.கவினரும் இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி திமுகவினரின் மேடை நாகரிகம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.
ஒரு உயர் அதிகாரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அரசு நிகழ்ச்சியில் அமர்வதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதும், அரசியல்வாதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் என பலர் இருக்கையை பட்டா போட்டுக் கொண்டது நாகரீகமற்ற அரசியல் நோக்கத்தை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.