முதல்ல நீங்க அந்த ரூ.15 லட்சத்தை கொடுங்க.. அதுக்கப்புறம் நாங்க ரூ.29 ஆயிரம் தர்றோம் : அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி பதில்!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 11:07 am
Quick Share

ஆளுக்கு 15 லட்சம் போடுவேன் என பிரதமர் மோடி கூறினார் அல்லவா..? அதை தற்போது கணக்கிட்டு கொடுத்தால், முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையின் நிலுவைத் தொகையான 29 ஆயிரத்தை வழங்குவார் என திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திட்டத்தை கெஜ்ரிவால் அவர்கள் தனி குழு கொண்டு அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆராய அறிவுறுத்தி இருக்கிறோம்.

இந்தியாவிற்கே முன்னோடி தலைவராக ஸ்டாலின் விளங்குகிறார். குடும்பத் தலைவி உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. அண்ணாமலை அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்கும்போது, 29 ஆயிரம் ஆக மொத்தம் சேர்த்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் மோடி நபர் ஒருவருக்கு 15 லட்சம் தருவதாக கூறினாரே, அதை கணக்கிட்டு வழங்கினார்கள் என்றால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் 29 ஆயிரத்தை வழங்குவார். அதற்கு நீங்கள் தயாரா..?, என அவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.

Views: - 310

0

0