மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என திமுக ஒன்றிய குழு உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியை சேர்ந்த இவர் பெரியவரிகம் 6வது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என்றும், மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக பதிவு செய்திருந்தது பெரும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்ட போது, “நான் 6வது வார்டு பெரியவரிகம் துத்திப்பட்டு மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுப்பதில்லை. டெண்டரும் முறைப்படி இல்லை. ஒன்றிய குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை. கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை. மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன்.
மேலும், இந்த மூன்று வருடத்தில் பெரியவரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றிய தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார்கள். இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, எனக் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர், கிளை செயலாளராக இருந்த போது இருந்த மரியாதை கூட தற்போது கட்சியில் இல்லை என்றும், தேர்தலில் 15 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்று மக்கள் பணிகளை செய்ய விடாமல் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் தடுக்கின்றனர் எனவும், மனம் வெறுத்து உட்கார்ந்து உள்ளேன், என தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.