மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என திமுக ஒன்றிய குழு உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியை சேர்ந்த இவர் பெரியவரிகம் 6வது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என்றும், மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக பதிவு செய்திருந்தது பெரும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்ட போது, “நான் 6வது வார்டு பெரியவரிகம் துத்திப்பட்டு மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுப்பதில்லை. டெண்டரும் முறைப்படி இல்லை. ஒன்றிய குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை. கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை. மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன்.
மேலும், இந்த மூன்று வருடத்தில் பெரியவரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றிய தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார்கள். இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, எனக் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர், கிளை செயலாளராக இருந்த போது இருந்த மரியாதை கூட தற்போது கட்சியில் இல்லை என்றும், தேர்தலில் 15 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்று மக்கள் பணிகளை செய்ய விடாமல் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் தடுக்கின்றனர் எனவும், மனம் வெறுத்து உட்கார்ந்து உள்ளேன், என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.