சனாதனத்ததை ஒழிக்கணும் சொன்ன திமுகவை முதலில் ஒழித்து கட்டணணும் : அண்ணாமலை ஆவேசப் பேச்சு!!!
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட அல்லிநகரம் பகுதியில் தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டு பங்களா மேட்டில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார்.
பின்னர் நிறைவு விழாவில் பேசிய அண்ணாமலை;- தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 இடங்கள் வரை தமிழக மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். ஆனால் திமுக காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போதிலும் 2014 ஆம் ஆண்டு வரை வெறும் ஐந்து மருத்துவக் கல்லூரிகளையே தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கியதன் மூலம் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
இளைஞர்கள், பெண்கள் தொழில் முனைவோர்கள் சாலையோர வியாபாரிகள், தனி நபர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு அவல ஆட்சி நடந்து வருகிறது.வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசி வரும் திமுகவை ஒழிக்க அனைவரும் சூளுரைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.