Categories: தமிழகம்

ஆட்டுக் குட்டியை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்- அண்ணாமலையின் கோரிக்கையை வைரலாக்கும் திமுக..!

அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோவை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க என மும்முனை போட்டி இருந்து வந்த நிலையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அ.தி.மு.க வை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் படிக்க: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பா.ஜ.க நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை பேசும் போது :-

ஆட்டுக் குட்டியை பிரியாணி சமைத்தாலும், எது சமைத்தாலும் அதனை கொடுமை படுத்தாமல் ஆடு வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தி.மு.க வால் கோவையில் டெபாசிட் வாங்க முடியாது என கூறி இருந்தார். இதனால் தி.மு.க தொண்டர்கள் தேர்தல் முடிந்த பின்பு ஆட்டை பிரியாணி போடுவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவு வந்து கொண்டு இருந்த போது கோவை கோட்டைமேடு பகுதியில் மட்டன் பிரியாணி சமைத்து அருகில் ஆடுகளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்து தி.மு.க வென்று விட்டது, என்று அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதமாக ஏற்பாடு செய்து இருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறிய வீடியோ, மீம்ஸ்களை தி.மு.க வினர் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வைரல் ஆகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.