டீ போட்டு வாக்கு சேகரித்த திமுக பெண் வேட்பாளர் ..!! வேலூரில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்…

Author: kavin kumar
7 February 2022, 7:15 pm
Quick Share

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டீ கடையில் ஒன்றில் அனைவருக்கும் டீ போட்டு அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா இன்று மக்கான் அம்பேத்கார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு சென்ற வேட்பாளர் கடையில் மீன்களை வெட்டி பொது மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதேபோல அருகில் உள்ள டீ கடைக்கு சென்ற அவர், அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.இதேபோல பிரியாணி கடையிலும் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், இப்பகுதியில் நான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.

Views: - 1272

0

0