தனது கட்சியை சேர்ந்தவர்களே தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஆலங்குளம் பகுதி திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.
தனது பகுதியை சேர்ந்த சக திமுக நிர்வாகிகளால் தான் மிரட்டப்படுவதாகவும், தன்னை அவர்கள் கொன்று விடுவதாகவும் கூறி, தனது வீட்டிற்கு வந்து தன்னை அச்சுறுத்தி சென்றதாகவும் அவர் புகார் கூறினார்.
மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டால், அவதூறாக தங்கள் மீது தலைவர் தமிழ்ச்செல்வி குற்றச்சாட்டு தெரிவிப்பதாக எதிர்தரப்பினர் கூறியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.