Categories: தமிழகம்

மாட்டிறைச்சி சாப்பிடுவயா? புர்காவால் ஷூவை துடைக்க வைத்த ஆசிரியர்கள் : அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!!

மாட்டிறைச்சி சாப்பிடுவயா? புர்காவால் ஷூவை துடைக்க வைத்த ஆசிரியர்கள் : அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி அசோகபுரம் அரசுப் பள்ளியில் முக்தர் என்பவரின் மகள் படித்து வருகிறார். இவரிடம் ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் ராஜ்குமார், மாணவியை வாடி போடி என அழைத்ததுடன் 2 மாதமாக மிரட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்க புறப்படுங்க என பதில் அளித்ததாகவும் ஆனாலும் சம்ப்ந்தப்பட்ட அந்த 2 ஆசிரியர்களையும் அழைத்து தலைமை ஆசிரியர் கண்டிக்கவே இல்லை எனக் கூறியும் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்கள் மாணவியின் பெற்றோர்.
இதையடுத்து மாணவிக்கும், பெற்றொருக்கும் தைரியம் அளித்த காவல்துறையினர் நீங்க எப்போதும் போல் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைங்க, ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பேரில் முக்தர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய நிலையில், தீபாவளி முடிந்து 2 நாட்களில் மீண்டும் அபிநயா, ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர், பள்ளியில் தங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி மனு அளித்துள்ளனர். இந்த தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கும் சென்றுள்ளதால் இனி என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.