யாரு சொன்னா கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதின்னு: அவரு நடிச்ச பக்தி படம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதி என பலரும் அறிந்திருக்கும் நிலையில் அவர் நடித்த பக்தி படம் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

கடவுள் இல்லை என சொல்லும் நாத்திகராக நாம் அறிந்த கமல்ஹாசன், ஆத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் பக்திப் படம் ஒன்றில் நடித்து, கடவுள் எனக்கும் வேண்டப்பட்டவர் தான் எனும் வசனம் பேசியிருக்கிறார் என்றால் அது நம்பக்கூடியதாக இருக்காது. ஆனால், அது நடந்திருந்திருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

சுமார் 40 வருடங்களுக்கு முன் அதாவது 80 காலகட்டத்தில் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு இணையாக பக்தி படங்களும் வெளியானது. அம்மன், முருகன், ஐயப்பன், பெருமாள், விநாயகர் என அனைத்து கடவுள்களின் படங்களும் வெளியான காலகட்டம். அந்த படங்களில் அவ்வப்போது, ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்களும் கேமியோ ரோலில் தலைகாட்டி வந்தனர்.

அப்படி உருவான ஒரு படம்தான் 1980ம் ஆண்டு வெளியான ‘சரணம் ஐயப்பா’ எனும் பக்திப் படம். சபரிமலை ஐயப்பனின் புகழைப் பரப்பும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை மனோரமா ஆச்சியின் மகன் பூபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய தசரதன் என்னும் இயக்குநர். இவர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும்கூட.

கடுமையான குற்றங்களைச் செய்து ஜெயிலுக்குச் சென்று அங்கிருந்துத் தப்பித்த சில குற்றவாளிகள் சபரிமலை பகுதியில் தஞ்சமடைந்து போலீஸிடமிருந்து தப்பிப்பப்பதற்காக ஐயப்ப பக்தர்கள்போல வேடமிட்டுக்கொள்வார்கள். கதைப்போக்கில் அவர்கள் மனம் மாறி திருந்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதன் திரைக்கதையில் ஆங்காங்கே ரஜினி, முத்துராமன், நம்பியார், ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா, பாக்யராஜ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்திருப்பார்கள். அந்த வரிசையில்தான் கமலும் இந்தப் படத்தில் கேமியோ ரோல் செய்து தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருப்பார். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ஐயப்பப் பக்தரான சுருளிராஜன் பலரிடம் நன்கொடை கேட்டுப் போவார்.

அந்த வரிசையில் நடிகர் கமலாகவே நடித்திருக்கும் கமலிடமும் நன்கொடை கேட்டு அவர் போக, கமல் நன்கொடைக் கொடுத்து அனுப்புவதுபோல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்தக் காட்சியில் கமல், `ஐயப்பன் எனக்கும் வேண்டப்பட்டவர்தான்’ என்ற வசனத்தையும் பேசி நடித்து ஆச்சர்யத்தையும் எகிற விட்டிருப்பார்.

மேலும் அந்தப் படத்தில் கைதிகள் சிறையில் இருக்கும்போது பூபதி உள்ளிட்ட நடிகர்கள் ஆடிப்பாடும்.. இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் உருவான ‘அண்ணா வாடா.. தம்பி வாடா’ என்னும் பாடலையும் பாடியவர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.