Categories: தமிழகம்

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா?.. வயநாடு விவகாரம் துரைமுருகன் காட்டம்..!

வேலூர்: வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு – அவர்களுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

கொஞ்சமாவது அறிவு இருக்கும் என பார்த்தேன். ஆனால், இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது அண்ணாமலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மகளிர் விடியல் பயன புதிய 5 நகர பேருந்துகள் 17 புறநகர் பேருந்துகள், கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வழித்தட பேருந்துகள் என 22 புதிய பேருந்துகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பள்ளி கல்லூரி மாணவர்களின் வருகையின்போது தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட நிறுத்த முறை பேருந்துகள் பயணிக்க வேண்டும் இல்லாவிடில் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வது ஒரு சேவை அது ஒரு தொழில் அல்ல இதில் டிக்கெட் கணக்கு பார்க்கக் கூடாது என பேசினார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி, வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க முடியாது எனக் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பெயரிடராக மத்திய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா அல்லது கல்லா என தெரியவில்லை.

மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கும் என பார்த்தேன் ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என பதிலளித்தார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது வரை போதிய மருத்துவ வசதி, ஏடிஎம் வசதி உள்ளிட்டவை இல்லாது குறித்து கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியரும் ஆணையரும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என கூறினார் அப்படி எடுக்கப்பட்டால் கனிம வளங்களை எடுக்க முடியாது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் மத்திய அரசு அறிவு கட்டும் பார்க்கலாம் அதன் பிறகு பார்க்கலாம் என கூறினார்.

Poorni

Recent Posts

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

19 minutes ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

1 hour ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

1 hour ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

2 hours ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

18 hours ago

This website uses cookies.