கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யாகுமார் என்பவர் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சராக தொடர செந்தில் பாலாஜி விரும்புகிறார் என கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதையும் படியுங்க: பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!
இதையடுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர், நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை, யாரோ ஒருவர் உந்துததலால் அரசியல் காரணங்களுக்காக வித்யாகுமார் மனு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.
சாட்சிகளை கலைக்கவில்லை, யாரையும் அச்சுறுத்தவில்லை, இந்த வழக்கை ரதத்து செய்ய வேண்டும் என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இன்று நீதிபதி சரமாரியாக செந்தில்பாலாஜிக்கு கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா?.
அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியை கலைக்கமாட்டார் என எப்படி கூற முடியும், மெரிட் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை, அரசயிலமைப்பு பிரிவை மீறியதால்தான் ஜாமீன் அளித்தோம் என விளக்கம் அளித்தனர்.
ஜாமீன் என்பது சாட்சியங்களை கலைக்க கொடுக்கப்பட்ட லைசன்ஸ் அல்ல, செந்தில் பாலாஜி சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுக்கிறார் என நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
அதே போல சாட்சியங்களை கலைக்கலாம் என அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க நதிபதிகள் மறுத்தனர். மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் (ஏப் 28) அமைச்சர் பதவியா? அல்லது ஜாமீன் வேண்டுமா? என பதில் அளிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.