திருப்பூர் ரயில்வேமேம்பாலத்தில் பெண் ஒருவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தில் உள்ள மூட்டை மீது அமர்ந்து கொண்டு ஹாயாக வேடிக்கை பார்த்து வந்த செல்ல வளர்ப்பு நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைக்கவசம் அணியாமல் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வதும், பின் இருக்கையில் வைக்கப்பட்ட மூட்டையில் ஹாயாக அமர்ந்து கொண்டு செல்ல பிராணியான நாய் ஒன்று வேடிக்கை பார்த்து கொண்டே வருவதும் திருப்பூரின் பிரதான பகுதியான ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்றது.
பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது உடன் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் உள்ள வைக்கப்பட்டிருந்த மூட்டையின் மீது ஹாயாக அமர்ந்து கொண்ட செல்ல நாய், திரும்பி திரும்பி பார்த்து வேடிக்கை பார்த்து வருகிறது.
இதனைப் பின்தொடர்ந்து வாகனங்களில் செல்லும் நபர்கள் ஆச்சரியத்துடன் அதனை கண்டு ரசிப்பதும், வாகன ஓட்டி ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.