தமிழகம்

எச்சரிக்கையை அறிவிப்பாக மாற்றிய டிரம்ப்! இந்தியா மீது 25% வரி விதித்ததன் பின்னணி என்ன?

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு என்ற பெயரில் பல நாடுகளை எச்சரித்து வருகிறார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் டிரம்ப். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் கூறி வந்தார். 

கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் 20 முதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தியா மீது 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் எரிப்பொருள் வாங்குவதால் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்பாக கனடாவுக்கு 35 சதவிகிதமும், இலங்கை, ஈராக், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகிதமும் லிபியா, மால்டோவா நாடுகளுக்கு 25 சதவிகிதமும் டிரம்ப் வரி விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அந்த வரியை குறைக்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையிலும் உலகிலேயே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அவர் கூறியிருந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுதான் இதன் பின்னணி எனவும் கூறிகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.