“லேப்டாப் எல்லாம் கேட்காதீர்கள் பள்ளிக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை சின்னமலையில் அமைந்துள்ள மடுவின்கரை மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலம் 13 குழு தலைவர் துரைராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரிய ராஜன் அவர்கள், அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவர்கள் நன்றாக படிக்கிறீர்களா..? எனவும், தங்களுக்கு என்ன வசதி வேண்டும் என பல்வேறு வினாக்களை எழுப்பினார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு மாணவன் லேப்டாப் எப்பொழுது வழங்குவீர்கள் என்று கேட்டதற்கு, ‘லேப்டாப் எல்லாம் இப்போது வேண்டாம், பள்ளிக்கு என்ன தேவையோ, அதை முதலில் கேளுங்கள்,” என்று பதில் அளித்தார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.