சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக விரோத கும்பலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்று இருந்துவிடாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள், கொலை செய்ய தூண்டியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்
பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.