திமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா? பள்ளிக் குழந்தைகளை யாசகம் எடுப்பது போல அமர வைத்ததால் பரபரப்பு..Viral Video!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலுவத்தூரில் திண்டுக்கல் பாராளுமன்ற திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் 50 ரூபாய் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சிறு குழந்தைகளை கையில் அருவாள் சுத்தியல் சின்ன பதாகைகளுடன் யாசகம் எடுப்பது போல் அமர வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூவனூத்து புதூர், நொச்சி ஓடைப்பட்டி, குரும்பபட்டி, கொளக்காரன்பட்டி, கல்லுப்பட்டி, ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஊர்களில் இரண்டாம் கட்டமாக பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.
பிரச்சாரத்தின் போது சிலுவத்தூர், அதிகாரிபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 50 ரூபாய் திமுகவினரால் வழங்கப்பட்டது.
மேலும் சிலுவத்தூர், அதிகாரிபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தின் போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் ரூபாய் 50 மற்றும் பணம் வழங்கிய வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சில்வார்பட்டி என்ற ஊரில் பள்ளிச்சீருடை அணிந்த குழந்தைகளிடம் கட்சி சின்னம் பொறித்த பதாகையும் ஆரத்தி தட்டினையும் கொடுத்து யாசகம் எடுப்பது போல அமர வைத்திருந்தது காண்போருக்கு வேதனையை அளித்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.