தமிழகம்

கடைக்கு போக வேண்டாம்.. இனி வீடு தேடி வரும் தங்கம்… இந்தியாவில் முதன்முறையாக..!!

இந்தியாவில் முதன் முறையாக தங்கம் வாங்குவதற்கான பெப்பி கோல்ட் தங்க சேமிப்பு மற்றும் முதலீட்டு புதிய பரிமாணத்தை உருவாக்கும் மொபைல் பயன்பாட்டிலான புதிய செயலியை அறிமுகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் இணை பங்குதாரராக இமானுவேல்மணி, நிறுவனத்தில் சி இ ஓ அருண்பிரதீப் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். தென்னிந்தியாவில் நகைக்கான மதிப்பு அதிகம் உள்ளது. மேலும் விற்பனைக்கான இடமும் உள்ளது. தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்கும் வியாபாரிகளிடையே இருக்கும் பிரச்சனை தொடர்பாக சுமார் 5வருடம் ஆராய்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியானது திருச்சி உள்ள சுமார் 700 நகை கடைகள் இடம் பெற்றுள்ளது. இதில் நகை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த செயலி மூலமாக நேரடியாக தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த நிறுவனத்தினர் நேரடியாக வீட்டிற்கு வந்து நகைகளை வழங்கி விடுகின்றனர்.

மேலும் இந்த செயலி மூலம் எந்தெந்த கடைகளில் உங்களுக்கான தங்கத்தின் விலை குறைவு, நகைத் திட்டங்கள் மற்றும் நிறுவனத்தில் அறிவிக்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கும் விதமாக இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த கடைக்குச் செல்கின்றனரோ அந்த கடையில் பெப்பி கோல்டு வழங்கும் கூப்பனை கொடுக்கும் பொழுது அதற்கான 15மில்லி கிராம் தங்கம் அடுத்த முறை தங்கம் வாங்கும் பொழுது அதனை பெற்றுக் கொள்ளலாம்.

பெப்பி கோல்டு செயலி குறித்து மற்றவருக்கு தெரிவிக்கும் பொழுது அதற்கான சுமார் 10மில்லி கிராம் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து இந்த செயல் மூலம் நகை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல, விற்பதற்கான வழியையும், தங்ககாசு. தங்க பத்திரங்கள் வாங்குவதற்கான அத்தனை வழிகளை ஏற்படுத்தியுள்ளோம்.

தற்போது திருச்சியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனமானது தொடர்ந்து மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்நிறுவனம் துவங்கப்பட உள்ளது. இது போல் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இச்செயலி மூலமாக இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது நிறுவனம் அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் தலைமை இடம் உள்ளது. தற்பொழுது இச்செயலி ஆங்கிலத்தில் உள்ளது. ஒரு மாதங்களில் தமிழிலும் அது செயல்படுத்தி விதமாக வடிவமைக்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர் சேவை குழு அமைக்கப்பட்டு அந்த குழு மூலமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளை குறித்து கேட்டறிய உள்ளோம் என தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.