Categories: தமிழகம்

வாழத்தான் விடல.. எங்களை சாக விடுங்கள் : திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற தனியார் விடுதி உரிமையாளர்!!

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலகமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக நகரச்செயலாளர் வாள்சுடலையின் தம்பி கீழ வீர ராகவபுரம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் டோல்கேட் அருகே விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ராமகிருஷ்ணனின் விடுதிக்கு பாதாள சாக்கடைதிட்டத்தில் இணைப்பு வழங்க நகராட்சி 5-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாரகர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ரூ 5-லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறி விடுதி உரிமையாளர் ராமகிருஷ்ணன் தனது மனைவி சண்முகசுந்தரி உடன் நகராட்சி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முன்றார்.

அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதயனைடுத்து நகராட்சி அலுவலம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகரராட்சி நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் வேலவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனியார் விடுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன்
விதிமுறைகளை மீறி விடுதியில் கழிவறைகளை கட்டி கழிப்றை கழிவுகளை சாலையில் திறந்தவெளியியில் விடுவது தெரியவந்ததையடுத்து விடுதியிலிருந்த கழிப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் முறையான அனுமதியின்றி விடுதி கட்டப்பட்டுள்ளதாக விடுதியிலிருந்து பாதாள சாக்கடை திட்டத்திற்கு செல்லும் கழிவு நீர் இணைப்புகளையும் நகராட்சி நிர்வாகம் துண்டிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விடுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கேட்டு ராமகிருஷ்ணன் நகராட்சியில் பணம் கட்டியுள்ளார். ஆனால் அவரது விடுதி முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதால் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருதலாலும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்ததாக நகராட்சி ஆணையர் வேலவன் தெரிவித்தார்.

இந்த நிலையில் விடுதிக்கு பாதாளை சாக்கடை இணைப்பு வழங்க திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி திமுக நகர செயலாளரின் தம்பி நகராட்சி அலுவலகமும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.