அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் மலர்விழி ஆகியோர் தைலமரக்காட்டில் காளான் பறிக்கச் சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், இருவரும் கத்தியால் குத்தப்பட்டு, காட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கழுவந்தோண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி முயல் வேட்டைக்கு பால்ராஜ் சென்றதாகவும், அப்போது, புதரின் நடுவில் காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழியை முயல் என நினைத்து சுளிக்கி ஆயுதம் மூலம் பால்ராஜ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பால்ராஜ் கத்தியால் மலர்விழியை குத்தியதைப் பார்த்த கண்ணகி சத்தம் போட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பால்ராஜ், கத்தியால் கண்ணகியையும் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முயல் என நினைத்து பெண் கொலை செய்யப்பட்டதை மறைக்க மற்றுமொரு கொலையை அரங்கேற்றியது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.