வேலூர் : தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த கூலித்தொழிலாளி முனிராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிராஜ் (வயது 50). இவரது தாய் இந்திராணி (வயது 70) மற்றும் சகோதரி சின்னம்மா (வயது 42). இவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த முனிராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் இந்திராணி மற்றும் சகோதரி சின்னம்மாவை உருட்டு கட்டையால் தாக்கியதுடன் கட்டுகல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற தம்பி தினேஷையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த வழக்கு பரதராமி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டணையும் தம்பியையும் தாக்கி படுகாயமடைய செய்ததற்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதன் அடிப்படையில் முனிராஜ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.