Categories: தமிழகம்

ஒரே அறையில் இரட்டைக்கொலை… தாய், மகன் அடித்துக் கொலையா? பதற்றத்தை கிளப்பிய புதுக்கோட்டை சம்பவம்!!

தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஆறுமுகம் மகன் பழனியப்பன் (வயது 54). கட்டிட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியராக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வேந்தன்பட்டியில் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்துவந்த தாயார் சிகப்பிக்கு (வயது 75) இரவு உணவு வழங்க அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.

காலை கட்டிடப்பணிக்காக சென்ற தொழிலாளர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கதவு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயும்,மகனும் இறந்தநிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தபின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது தலையில் பலமாக தாக்கப்பட்டு பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சென்று கொலைச்சம்பவத்தை பார்வையிட்டு பழனியப்பன் குடியிருந்த வீட்டினையும் பார்வையிட்டார்.

அப்போது பழனியப்பன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கேமரா காட்சி சேகரிப்பு பாகங்களும் கொலையாளிகளால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

மேலும் அந்த வீட்டிற்குள் இருந்த பிரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுள்ளது. நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல் காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பழனியப்பன் வைத்திருந்த பணத்தையும் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க இக்கொலைச்சம்பவம் நடைபெற்றுளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

…இணையத்தில் வைரலான ஆபாச டிஜிட்டர் விளம்பர பலகையை நீக்கம் செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.