திருச்சி முசிறியில் இரட்டைக் கொலை- ஒரே நேரத்தில் ஆண் மற்றும் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்தார்.
முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வளையல் வியாபாரம் செய்து வசித்து வரும் முருகேசன் மனைவி கீதா (46 ) இவர் தன் கணவனைப் பிரிந்து இருந்து இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில், கீதா பாலச்சந்திரனிடம் கேஸ் சிலிண்டர் புதிதாக பதிவு செய்வதற்கு பணம் கேட்டுள்ளார்.
பாலச்சந்திரன் குறைவான பணம் கொடுத்ததால் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று பாலச்சந்திரனை கீதா கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன் இன்று காலை ஆறு மணி அளவில் கீதா வீட்டிற்கு சென்று கீதாவை அறிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதோடு, நின்றுவிடாமல் தனது சொந்த ஊரான வாளவந்தியில் தனது வீட்டு அருகில் உள்ளவரிடம் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் 55 என்பவரை ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள டீ கடையில் வைத்து தலையில் வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில், கீழே சாய்ந்த ரமேஷை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார்.
இரட்டை கொலை செய்துவிட்டு பாலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில், அரிவாளுடன் சரணடைந்து விட்டார். இச்சம்பவம் முசிறி பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த 2003-ஆண்டு இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தான் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இறந்து போன ரமேஷ் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் பாலச்சந்திரன் மீது அளித்துள்ளார். காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்துள்ளதாக வாழவந்தி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.