ரிதன்யாவின் தற்கொலை வடு மறையும் முன்பே, திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் பிரீத்தி என்ற இளம்பெண்ணின் உயிரும் வரதட்சணை கொடுமையால் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, பிரீத்திக்கு சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 120 சவரன் தங்கம், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் என பெண் வீட்டார் தாராளமாக வழங்கியுள்ளனர். ஆனால், இவை எல்லாம் போதாதென, பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் கிடைத்த 50 லட்ச ரூபாயை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரீத்தியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த பிரீத்தி, தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
நடவடிக்கை என்ன?
பிரீத்தியின் பெற்றோர், கணவர் சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம், வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான குரலை மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது.இது எதை உணர்த்துகிறது?
பெண்ணின் உயிரை விலையாகக் கேட்கும் இந்த கொடூர பழக்கம், நம் சமூகத்தில் இன்னும் வேரூன்றியிருப்பது வேதனை.
பிரீத்தியின் மறைவு, சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி! வரதட்சணை எனும் விஷ வித்தை அழிக்க, கல்வி, விழிப்புணர்வு, கடுமையான சட்டங்கள் மூலம் நாம் ஒன்றிணைய வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.