தமிழகம்

ரிதன்யாவை தொடர்ந்து காவு வாங்கிய வரதட்சணை… 125 சவரன், ரூ.25 லட்சம், கார் கொடுத்தும் பத்தல.. திருப்பூரில் கொடூரம்!

ரிதன்யாவின் தற்கொலை வடு மறையும் முன்பே, திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் பிரீத்தி என்ற இளம்பெண்ணின் உயிரும் வரதட்சணை கொடுமையால் பறிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

கடந்தாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, பிரீத்திக்கு சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 120 சவரன் தங்கம், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் என பெண் வீட்டார் தாராளமாக வழங்கியுள்ளனர். ஆனால், இவை எல்லாம் போதாதென, பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் கிடைத்த 50 லட்ச ரூபாயை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரீத்தியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த பிரீத்தி, தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.

நடவடிக்கை என்ன?

பிரீத்தியின் பெற்றோர், கணவர் சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம், வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான குரலை மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது.இது எதை உணர்த்துகிறது?
பெண்ணின் உயிரை விலையாகக் கேட்கும் இந்த கொடூர பழக்கம், நம் சமூகத்தில் இன்னும் வேரூன்றியிருப்பது வேதனை.

பிரீத்தியின் மறைவு, சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி! வரதட்சணை எனும் விஷ வித்தை அழிக்க, கல்வி, விழிப்புணர்வு, கடுமையான சட்டங்கள் மூலம் நாம் ஒன்றிணைய வேண்டும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.