Categories: தமிழகம்

திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

சேலம், அஸ்தம்பட்டி பகுதியினை சார்ந்தவர், பிரேம், இவரது சகோதரியினை கடந்த ஜூன் 3 ம் தேதி அன்று கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியினை சார்ந்தவர் மாணிக்கம் மகன் விக்னேஷ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணமான நாளிலிருந்தே, தினம் தோறும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சகோதரர் பிரேம், சகோதரி பிரபாவதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க, உடனே, க.பரமத்தியில் புதிதாக முதல்வர் கையால் திறந்து வைக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த போது அங்கு கம்யூட்டர் இல்லை, பேப்பரும் இல்லை, ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், பெண் போலீஸ் ஒருவரும் தான் உள்ள நிலையில், இன்று காலை கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மீண்டும் அளிக்கப்பட்டதையடுத்து , வரதட்சனை கொடுமை செய்த குடும்பத்தினை அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை செய்தும் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் முன்பு திடீரென்று அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொறுப்பேற்ற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால், காணொளியில் திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டுமே உள்ள நிலையில் எழுதுவதற்கு கூட எந்த ஒரு உபகரணங்களும் இல்லாத நிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை உள்ளது கவலைக்குள்ளான விஷயம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 minutes ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

2 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

2 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

3 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

4 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

4 hours ago

This website uses cookies.