விருதுநகர் : சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 30 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 6பேர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தீடீரென்று குழி தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அப்போது, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (40) கிருஷ்ண மூர்த்தி (50) இருவரும் மீதும் மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் மற்றும் சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இருந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.