கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் நபர்களுக்கு பைக் பரிசாக வழங்கிய கடை உரிமையாளர் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான ஜேகேஆர் டெக்ஸ்டைல்ஸ் என்கின்ற கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழாக்காலங்களில் இங்கு சில்லறையாகவும் மொத்த விற்பனையிலும் ஆடைகள் வழங்கி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஒன்று முதல் இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றி வேறு வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த பிரபல துணிக்கடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என கடையின் உரிமையாளர் நினைத்துள்ளார்.
இதனால், பொங்கல் பண்டிகையொட்டி இன்று தனது துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வந்த நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உற்சாகமூட்டிய கடையின் உரிமையாளர் ரமேஷ் காந்தி, இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.