துணிக்கடையில் அட்டகாசம்… பணத்திற்கு பதிலாக கத்தியை காட்டிய ரவுடி கும்பல் .. ஊழியரை கொலை செய்ய முயன்றதால பரபரப்பு
பொன்னேரியில் ரவுடி கும்பல் அட்டகாசம் கத்தியுடன் துணிக்கடை மற்றும் மருந்தகத்தில் புகுந்து ஊழியர்களை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேன்பாக்கம் பகுதியில் முதல் தளத்தில் செயல்படும் புதிய ஆடை விற்பனை கடை ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் புதிய ஆடையை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை தராமல் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவர்களை உள்ளே வைத்து கேட்டினை பூட்டிவிட்டு கீழே இருந்த மருந்தகத்தில் சென்று புகுந்து கொண்டார். உடனடியாக, அங்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கத்தியுடன் அவரை சரமாரியாக தாக்க முயன்றனர். மேலும், பொதுமக்கள் அதிகளவில் அங்கு இருப்பதை கண்ட ரவுடி கும்பல் துணிக்கடையில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியது.
இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் பொன்னேரி போலீசார் அங்கு வருவதற்குள் கத்தியுடன் சுற்றிய ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு கத்தியை காட்டி அச்சுறுத்தும் வகையில், செயல்பட்டு தப்பியோடிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.