துணிக்கடையில் அட்டகாசம்… பணத்திற்கு பதிலாக கத்தியை காட்டிய ரவுடி கும்பல் .. ஊழியரை கொலை செய்ய முயன்றதால பரபரப்பு
பொன்னேரியில் ரவுடி கும்பல் அட்டகாசம் கத்தியுடன் துணிக்கடை மற்றும் மருந்தகத்தில் புகுந்து ஊழியர்களை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேன்பாக்கம் பகுதியில் முதல் தளத்தில் செயல்படும் புதிய ஆடை விற்பனை கடை ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் புதிய ஆடையை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை தராமல் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவர்களை உள்ளே வைத்து கேட்டினை பூட்டிவிட்டு கீழே இருந்த மருந்தகத்தில் சென்று புகுந்து கொண்டார். உடனடியாக, அங்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கத்தியுடன் அவரை சரமாரியாக தாக்க முயன்றனர். மேலும், பொதுமக்கள் அதிகளவில் அங்கு இருப்பதை கண்ட ரவுடி கும்பல் துணிக்கடையில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியது.
இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் பொன்னேரி போலீசார் அங்கு வருவதற்குள் கத்தியுடன் சுற்றிய ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு கத்தியை காட்டி அச்சுறுத்தும் வகையில், செயல்பட்டு தப்பியோடிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.