விழுப்புரம் : பெட்ரோல் நிரப்பிய வாகனத்திற்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் அடுத்துள்ள முண்டியம்பாக்கம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 19) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
இதனை அடுத்து ஊழியர் ராகுல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய் பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுலை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் கேட்டதற்கு பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.