விழுப்புரம் : பெட்ரோல் நிரப்பிய வாகனத்திற்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் அடுத்துள்ள முண்டியம்பாக்கம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 19) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
இதனை அடுத்து ஊழியர் ராகுல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய் பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுலை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் கேட்டதற்கு பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.