வேலூர் : கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை மீட்டுத்தரக்கோரி
காவல் நிலையத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வேலூர் மாநகர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தண்டபாணி. இன்று மாலை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு வந்த அவர் திடீரென அங்குள்ள மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வதாக போலிசாரை மிரட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் தான் சண்டை போட்டதாகவும் இதனால் எனது மனைவி மகளை அவர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்பு தரக்கோரி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக அவர்களை மீட்டுத்தரக்கோரி இன்று மரத்தின் மீது ஏரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையத்து தண்டபாணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மரத்தில் இருந்த தண்டபாணியை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் “தண்டபாணி மதுபோதையில் இருந்ததாகவும், இவர் அடிக்கடி குடித்து வந்து மனைவி மகளை தொல்லை செய்துள்ளார். இதனால் தண்டபாணி மனைவி அவருடைய அம்மா வீட்டிற்கு தண்டபாணியை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் தண்டபாணியோ உறவினர்கள் மனைவியை கடத்தி விட்டதாக போதையில் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் என கூறினர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
காவல் நிலையத்தில் உள்ள மரத்தில் ஒரு நபர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறிது நேரம் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த அந்த நபர் போதை தெளிந்ததும் வெளியில் அமர்வதாக கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவீட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.