எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை டிரம்ஸ் வாசிப்பாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குண்டடம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள கொடுவாயில் அவருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற பின்னர் அவிநாசி பாளையம் போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். அப்போது டிரம்ஸ் மேள வாசிப்பாளரான அருள் என்பவர் காவல் ஆய்வாளர் கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.
இதனையடுத்து அவரை பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எதிர்கட்சித் தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.