சேலம் ; வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் முத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் திமுக பிரமுகர் அராஜகம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள 146 அடி உயரமுள்ள முத்து மலை முருகன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலம் மாவட்டம் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதில், நேற்று மாலை அங்கு வந்த ஏத்தாப்பூர் பேரூராட்சித் தலைவர் அன்பழகன் மதுபோதையில் சாலையோர கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கடையில் வைத்திருந்த பொருட்களை வீதியில் வீசி எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டார். இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இச்செயலை பார்த்து முகம் சுளித்தும் அச்சத்திலும் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்பொழுது, அவர் செய்த அராஜகம் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.