தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு குடிபோதையில் தூங்கிய லாரி டிரைவரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில், விளாத்திகுளத்திலிருந்து – கோவில்பட்டி, திருநெல்வேலி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், குடிபோதையில் லாரி ஓட்டுனர் ஒருவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவ்வழியாக அரசு பேருந்து உட்பட கார், இருசக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட நேரமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் பொதுமக்கள் லாரியில் சென்று பார்த்த போது லாரியின் ஓட்டுனர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டு அவரை எழுப்பினர். ஆனால், அந்த லாரி ஓட்டுநர், “தான் கிளீனர் என்றும், லாரி ஓட்டுநர் எங்கோ சென்று விட்டார் என்றும், மது போதையில் மலுப்பலாக உளரினார்.
மேலும், எழுப்பிய அரசு பேருந்து நடத்தினரிடம், “என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று தெனாவட்டாக கூறிவிட்டு மீண்டும் உறங்க கிளம்பினார் அந்த குடிமகன்”. இதையடுத்து அங்கு அதிக அளவில் போக்குவரத்து நெரிசலாகவே பொதுமக்கள் வண்டியை எடுக்க சத்தம் போட்டதால் மிகுந்த குடிபோதையில் லாரி ஓட்டுநர் அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதி முன்னும் பின்னும் ஆக லாரியை ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அலப்பறையை கூட்டினார்.
இதைப் பார்த்து பயந்த பொதுமக்கள் லாரியை நிப்பாட்டுமாறு கூறி இறங்கச்சொல்லி… தர்ம அடி கொடுத்து கீழே இறக்கினர். பின்னர் பொதுமக்களில் ஒருவர் லாரியை எடுத்து ஓரமாக நிறுத்தியப்பின்னர் நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சரி செய்யப்பட்டது. குடிகார லாரி டிரைவரின் அலப்பறையினால் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.