சால்னா வாங்கி தர மறுத்த போட்டோ கிராபரை சரமாரியாக கத்தியால் தாக்கிய ஐந்து போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). இவர் ஒரு ஸ்டுடியோவில் புகைப்பட நிபுணராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தன்னுடைய உறவினரை சந்திக்க அருகே உள்ள டெம்பிள் சிட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த ஐந்து நபர்கள் விக்னேசை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ஐந்து பேரும் சேர்ந்து விக்னேஷை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு விக்னேஷ் அனுப்பப்பட்டார்.
இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக டெம்பிள் சிட்டி பகுதியை சேர்ந்த ஹரீஷ், கன்னியப்பன் என்ற தனுஷ், சரவணன், எல்லப்பன், பெரிய தனுஷ் ஆகிய ஐந்து வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போதை ஆசாமிகள் விக்னேஷை அழைத்து, பரோட்டா சாப்பிடுவதற்கு சால்னா வாங்கி வந்து கொடு என கட்டாயப்படுத்தி உள்ளனர். அதை செய்ய மறுத்ததற்காக நேற்று இரவு விக்னேஷ் செல்லும்போது, அந்த ஐந்து பேரும் சேர்ந்து இவரை தாக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு போட்டோகிராபரை, போதையில் இருந்த ஐந்து பேர் கத்தியால் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.