நீலகிரி ; குடிபோதையில் அரசு ஜீப்பை இயக்கிய ஓட்டுனரின் வீடியோ வைரலான நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உதகை எட்டின்ஸ் சாலையில் நேற்று மாலை தமிழக அரசு ஜீப்பை சரவணகுமார் என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது மிகவும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப்பை இயக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது, அந்த ஜீப்பை இயக்கிக் கொண்டிருந்தவர் முழு குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், பொதுமக்கள் அவரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில், அதனையும் கேட்காமல் மீறி அங்கிருந்து வாகனத்தை ஓட்ட முற்பட்டுள்ளார்.
இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அவரது செயலை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்ததை அடுத்த அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பெயரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் டிரைவர் சரவண குமாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.