நீலகிரி ; குடிபோதையில் அரசு ஜீப்பை இயக்கிய ஓட்டுனரின் வீடியோ வைரலான நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உதகை எட்டின்ஸ் சாலையில் நேற்று மாலை தமிழக அரசு ஜீப்பை சரவணகுமார் என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது மிகவும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப்பை இயக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது, அந்த ஜீப்பை இயக்கிக் கொண்டிருந்தவர் முழு குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், பொதுமக்கள் அவரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில், அதனையும் கேட்காமல் மீறி அங்கிருந்து வாகனத்தை ஓட்ட முற்பட்டுள்ளார்.
இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அவரது செயலை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்ததை அடுத்த அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பெயரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் டிரைவர் சரவண குமாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.