வாகன சோதனையின் போது மது அருந்திவிட்டு போலீசாரிடம் மாட்டிக் கொண்ட கணவனை காப்பாற்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய மனைவி உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வாகன தணிக்கை காவல்நிலைய உதவி ஆய்வாளர் யோஜிதாஸ் தலைமையிலான பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் பைக்கில் வந்த இருவர், போலீசாரைப் பார்த்ததும், வண்டியை விட்டு இறங்கி தள்ளிக் கொண்டு வந்தனர்.
இதனை கவனித்த போலீசார் அவர்களை மடக்கி சோதனை செய்தனர். இதில், இருவரும் மதுக்குடித்து வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ப்ரீத் அனலைசர் கருவி கொண்டு சோதனை செய்ய முற்பட்டபோது, வாகனத்தில் வந்த நபர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். மேலும், அதில் ஒருவர் தனது மனைவிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனை கேட்டு சம்பவ இடத்திற்கு உடனே வந்த அந்தப் பெண், எதற்காக தனது கணவரை நிறுத்தி வைத்துள்ளீர்கள்..? எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், எம்.பி. யை கூட்டிட்டு வரவா? எம்.எல்.ஏ.வை கூட்டிட்டு வரவா? பைக் ஓட்டினு வந்தாதான் ஃபைன் போடணும், தள்ளினு வந்தா போடக்கூடாது என வீரவசனம் பேசியுள்ளார். மேலும், தொப்பியாலும், கையாலும் உதவி ஆய்வாளர் யோகிதாஸ், காவலர் வெள்ளத்துரை ஆகியோரை தாக்கியுள்ளார்.
அதோடு, போலீசார் அனைவரும் ஃப்ராடு எனக் கூறி ஆவேசமாக நடந்து கொண்டார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்து முகவரி வாங்கிகொண்டு மூவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தது சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்த சத்யராஜ்(32) என்பவதும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது அவரது நண்பர் வினோத் குமார்(32) என்பதும் தெரியவந்த்து. மேலும் போலீசாருடன் வீரவசனமாக ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தாக்கியது சத்யராஜின் மனைவி அக்ஷயா(31) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவலர் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில், அக்ஷயா, அவரது கணவர் சத்யராஜ் மற்றும் அவர்களின் நண்பர் வினோத் குமார் ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.