சென்னை : கோயம்பேடு அருகே போதையில் வந்த இளைஞரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோயம்பேடு – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அதற்காக, அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞருக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு காலாலும் எட்டி உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல்நிலைக் காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.