‘நான் போவேன், இல்ல இங்கேயே மல்லாக்கா படுப்பேன்’ என வடிவேல் காமெடி பாணியில் ஈரோட்டில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட மது பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு காளை மாடு சிலை அருகில் மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது. சூரம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்தனர். அந்த சமயம், தர்ணா போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் கூடம் முன்பாக, இருசக்கர வாகனத்தில் வந்த மதுப்பிரியர் ஒருவர், திடீரென ரகளையில் ஈடுபட தொடங்கினார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மதுப்பிரியரை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சி செய்தனர். இருப்பினும், மதுப்பிரியர், அங்கிருந்து செல்லாமல், நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில், நான் வண்டியை தள்ளிட்டு போவேன், இல்ல இங்கேயே மல்லாக்க படுத்து கிடப்பேன்,” எனக்கூறி போலீசாரிடம் தொடர்ந்தது ரகளையில் ஈடுபட்டர்.
மேலும் காலையில் மதுக்கடை திறப்பதற்கு முன்னாதாகவே மது அருந்தி வந்த அந்த மதுப்பிரியர், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி இங்கு வர வேண்டும் எனக்கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 30 நிமிடமாக படாது பாடு படுத்திய அந்த மதுப்பிரியரால் பொறுமையிழந்த போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோ மூலமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போதை ஆசாமியின் ரகளை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.