திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர் மதுபான கடையின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மது போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தும்போது மது போதையில் மட்டையானது போல் நடித்துள்ளார். இதனை நம்பிய காவல் துறையினர் மது போதை தெளிந்த உடன் இந்த இடத்தை விட்டு சென்று விடுவான் என நினைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்த மது போதை ஆசாமி காவல்துறையினர் அருகில் இல்லாததை அறிந்து மீண்டும் ரகளை செய்யத் தொடங்கினார். பின்பு மீண்டும் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது போதை ஆசாமியை அடக்க எவ்வளவு முயற்சி செய்தும், அவர் அங்கிருந்து சாலையில் வேகமாக நடந்து சென்றார்.
பரபரப்பான சாலையின் நடுவே வாகனங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த குடிபோதை ஆசாமி திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நின்று கொண்டு, ‘இப்ப வாங்கடா பாத்துக்கலாம்’ என்று கத்தியபடி சாலையில் படுத்துவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்து அங்கிருந்து சென்றனர்.
பின் தொடர்ந்து வந்த சார்பு ஆய்வாளர் பாண்டியன் அங்கு இருந்தவர்களின் கைலி ஒன்றை வாங்கி போதை ஆசாமியின் உடம்பில் சுற்றி அருகிலுள்ள கட்டடத்திற்கு சக காவல்துறையினரின் உதவியோடு ஒரு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
சாலையின் நடுவே நிர்வாணமாக ஓடிய குடிபோதை ஆசாமியால் வேடசந்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.