கோவை ; தலைஉச்சிக்கு ஏறிய மது போதையால் பனை மர உச்சிக்கு ஏறி உறங்கிய போதை ஆசாமியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
பொள்ளாச்சி கோட்டூர் சாலை ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 120 அடி உயரமுள்ள பனை மரத்தின் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்து அக்கம் பக்கம் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீசாருக்கு தகவல் தந்த நிலையிலே அங்கு வந்த போலீசார் கூச்சலிட்டு சத்தம் போட்டும் அந்த நபர் காதில் விழவில்லை. பின்னர், தீயணைப்புத் துறைவிற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி அந்த நபரை மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை. பின்னர், இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட ராட்சச கிரேன் கொண்டு வரப்பட்டு மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள், மது போதையில் பனை மரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாபகமாக தூக்கி இரும்பு கூண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர்.
மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த ஆசாமியை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை செம்மனாம்தியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பதும், மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மரத்தின் மீது ஏறி உறங்கியதாக தெரிவித்தார். பின்னர், போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மது போதையில் மர உச்சிக்கு சென்று உறங்கிய நபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.