பழனியில் உணவகத்தில் ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரையும், அவரது மகனையும் மூன்று பேர் கடுமையாக தாக்கியதில் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர் சுப்பிரமணி. இன்று வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த மூன்று நபர்கள் குடிபோதையில் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு அருந்தி கொண்டிருந்தனர் . அப்போது, ஆம்லேட் கேட்டால் தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவில்லையே என கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த மூன்று பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எரிந்தும், சுப்ரமணியை அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கும் காட்சிகளும், சுப்ரமணியின் மகன் தினேஷையும் தாக்கியுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷை காப்பாற்ற போராடும் காட்சிகளும் அருகில் இருந்த பழக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் உணவகத்தில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.