Categories: தமிழகம்

தலைக்கேறிய மதுபோதை… தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் விபரீதம்… சரக்கு ரயில் மோதி தலைதுண்டாகி 2 பேர் பலி…!!

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு மூன்று பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், அங்கு ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பணகுடியை சார்ந்த ஜெபசிங் (27) என்பவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ரயிலில் அடிபட்டு கிடந்த இருவரது உடலை மீட்ட ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மது போதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரிய வந்தது. இதில், மூக்கில் பலத்த காயத்துடன் அடிபட்டு இறந்து கிடந்த திரு.வி.க. நகரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது மகன் மாரிமுத்து (23) என்பதும், இவர் மீது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது.

இதுதொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. அவருடன் தூத்துக்குடி பசும்பொன் நகரைச் சார்ந்த காளிபாண்டி என்பவரது மகன் மாரிமுத்து என்பவரும் மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து உறங்கியுள்ளார். அவரது கழுத்தின் மேல் ரயில் ஏறியதில் அவரது கழுத்து துண்டானது இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் அவரும் பலியானார்.

இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு பாலத்தின் அடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது மதுபோதை அதிகமானதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திரா செல்லும் சரக்கு ரயிலில் இவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் மாரிமுத்து என்ற பெயருடைய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெப சிங் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து ரயில்வே இருப்பு பாதை ஆய்வாளர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 hour ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 hour ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 hour ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

3 hours ago

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

3 hours ago

This website uses cookies.