தஞ்சையில் மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கோபத்தில் அவமரியாதையாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் வேலாயுதம் (55). இவர் சம்பவத்தன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஸ்கூட்டியில் பூக்காரத்தெருவை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் வனிதா (42) மற்றும் வசந்தா (28) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அவர்களை மறித்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டுள்ளார். இதில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் அந்த பெண்களை அவமரியாதையாக திட்டியுள்ளார். மேலும், அந்த காவலர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து பொது இடத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசியது மற்றும் போலீஸ் மாண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தியது போன்றவற்றுக்காக சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.