தஞ்சையில் மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கோபத்தில் அவமரியாதையாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் வேலாயுதம் (55). இவர் சம்பவத்தன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஸ்கூட்டியில் பூக்காரத்தெருவை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் வனிதா (42) மற்றும் வசந்தா (28) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அவர்களை மறித்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டுள்ளார். இதில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் அந்த பெண்களை அவமரியாதையாக திட்டியுள்ளார். மேலும், அந்த காவலர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து பொது இடத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசியது மற்றும் போலீஸ் மாண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தியது போன்றவற்றுக்காக சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.