பழனி பேருந்து நிலையம் அருகே மது போதையில் சுயநினைவின்றி பெண் ஒருவர் சாலையில் படுத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்று திரியும் பெண்கள், பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த பணத்தில் மது அருந்தி விட்டு போதையில் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் 25 வயது பெண் ஒருவர் கடும் மது போதையில் சாலையில் தள்ளாடி படி நடந்து வந்துள்ளார். அப்போது போதையில் உச்சத்தில் சென்ற அவர் நிலை தடுமாறி சாலையிலேயே சுயநினவின்றி ஆபத்தான நிலையில் படுத்துவிட்டார்.
சாலையில் சென்றவர்கள் பெண்ணை விபத்தில் சிக்கி இருப்பாரோ என்ற கோணத்தில் அவரை எழுப்ப முயன்ற போது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண் ஒருவர் மது போதையில் சுய நினைவின்றி சாலையில் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.